கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் என கூறப்படும் LCU-வில் கமல் மற்றும் கார்த்தியின் படம் இணைந்துள்ளது அனைவரும் அறிந்த விஷயமே, இந்நிலையில், லியோ படத்தை தொடர்ந்து விஜய் LCU-வில் இருப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்குள் அவர் இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன் அரசியல் முழுமூச்சுடன் களமிறங்கப் போகிறேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
இதனால், இனி விஜய் எப்படி LCU-வில் வருவார் என பலரும் கேட்டு வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விக்ரம் 2 மற்றும் கைது 2 படங்களில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. அதற்கான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் முன்பே எடுத்து விட்டாராம்.
இதனால், லியோ படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரம் 2 மற்றும் கைதி 2 படத்திற்கு தேவையான காட்சிகளை விஜய்யை வைத்து லோகேஷ் எடுத்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், விக்ரம் 2 மற்றும் கைது 2 படங்களில் விஜய்யின் காட்சிகள் இடம்பெறும் என்ற தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அது கண்டிப்பாக செம மாஸாகத் தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.