விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “படை தலைவன்”. இத்திரைப்படத்தை அன்பு என்பவர் இயக்கியுள்ளார். ஜகநாதன் பரமசிவம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகில் உள்ள சேத்துமடை பகுதியில் சண்முக பாண்டியன் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு யானையையும் வளர்த்து வருகிறார். எனினும் கடன் வாங்கி குடும்பத்தை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சண்முக பாண்டியன் குடும்பத்திற்கு உறவினராக இருக்கும் ஒருவர் இவர்களின் யானையை தன்வசப்படுத்தி கோடி ரூபாய் வரை சம்பாதிக்க திட்டம் போடுகிறார். இவரது திட்டம் நிறைவேறியதா? சண்முக பாண்டியன் இந்த திட்டத்தை எப்படி முறியடிக்கிறார்? என்பதே இத்திரைப்படத்தின் கதை என்று தெரிய வருகிறது.
இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் விமர்சகர் பிலிமி கிராஃப்ட் அருண் இத்திரைப்படத்தை தனது வீடியோ ஒன்றில் விமர்சித்துள்ளார்.
“முதல் பாதியில் சண்முக பாண்டியனுக்கு நடிப்பதற்கான ஸ்கோப்பே இல்லை. சின்ன சின்ன வசனங்களோடும் ரியாக்சன்களோடும் முடிந்துவிட்டது. இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியை ஓரளவு நன்றாகவே படமாக்கி இருந்தார்கள் என்று தோன்றியது. ஆனால் இரண்டாம் பாதி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை” என விமர்சகர் அருண் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ராகதேவன் இளையராஜா சார்-ஐ குறை சொல்வதற்கு நமக்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் ஒரு ஜீனியஸ் என்று உலகத்திற்கே தெரியும். ஆனாலும் என்ன செய்ய ஜீனியஸுக்கு வயதாகிறது இல்லையா? இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருக்கிற விதம் எல்லாமே 80களிலும் 90களிலும் அவர் அமைத்த இசையைத்தான் ஞாபகப்படுத்துகிறதே தவிர இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் இல்லை.
ஆனால் இதை விட பெரிய சம்பவம் ஒன்று படத்தில் உள்ளது. அதாவது கேப்டன் விஜயகாந்தை கேமியோவாக உள்ளே புகுத்த வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாமல், வழுக்கட்டாயமாக ஒரு காட்சியை எழுதி வைத்திருக்கிறார்கள். யாரோ ஒரு கதாபாத்திரத்திற்கு விஜயகாந்தின் மாஸ்க்கை அணிவித்தது போல்தான் அது இருந்தது. AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கேப்டன் என்று சொன்னால் அதை AI-ஏ நம்பாது. அந்தளவுக்கு மோசமாக செய்திருக்கிறார்கள்” என்று விமர்சகர் அருண் இத்திரைப்படத்தை விமர்சித்துள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.