இந்த படம் மட்டும் வந்திருந்தா.. விஜயகாந்த் போட்ட பக்கா ப்ளான்: கடைசில இப்படி ஆயிருச்சே..!

50கால கட்டத்தில் இருந்தே நடிகர் சங்க பிரச்சினைகள் இருந்து கொண்டே இருந்தது.ஆனால் விஜயகாந்த் தான் அதற்கு சரியான முறையில் தீர்வு கண்டார். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் நான்கும் மொழிகளையும் உள்ளடக்கிய சங்கமாக செயல்பட்டது.

இதனிடையே, நடிகர் சங்கத்தின் முக்கியமான கடமையே நடிகர், நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது. அந்தக் காலத்தில் MGR விருப்பத்திற்கு உடன்பட்டு, சிவாஜி சிறிது காலம் நடிகர் சங்கத்திற்கு தலைவராக இருந்தார். அவரை தொடர்ந்து மேஜர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

இவர்களை தொடர்ந்து, 80கள் காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்த் தலைமை ஏற்று, பெரும் கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை மீட்டு வருவதற்கு எத்தனையோ முயற்சிகளை கையாண்டார். அதில் ஒன்று தான் பிரபு, கார்த்திக், சத்யராஜ் ஆகியோருடன் இணைந்து விஜயகாந்தும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தது.

80கள் காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பிரபு, கார்த்திக், சத்யராஜ், விஜயகாந்த் ஆகிய நான்கு நடிகர்களுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே நடிகர் சங்கத்தை காப்பாற்ற ஒரு படம் நடித்துக் கொடுப்போம் என நான்கு பேரும் முடிவு செய்தனர். இதற்காக, இளையராஜா இசையமைக்க ‘இவர்கள் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற தலைப்பில் படத்திற்கான பூஜையும் போடப்பட்டு, என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. படம் பூஜையுடனேயே நின்று விட்டது.

இதனையடுத்து, அந்தப் படத்தை எடுக்க எவரும் முன்வரவில்லை. அதன் பிறகு தான் விஜயகாந்த் அத்தனை நடிகர்களையும் ஒன்று திரட்டி வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன்தொடர்ச்சியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலைகளும் நடைப்பெற்று வருகிறது. மேலும், அதற்கான முனைப்புடன் நடிகர் விஷால் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

Poorni

Recent Posts

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

28 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

58 minutes ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

1 hour ago

சென்னை புறப்பட்ட விஜய்.. பவுன்சர்களால் கொடைக்கானல் விவசாயிகள் அவதி.!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…

1 hour ago

டாப்ஸ்லிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற மருத்துவர்… சடலமாக திரும்பி வந்த சோகம்!

தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

This website uses cookies.