கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அவரது உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா சினிமாவுக்கு வந்த சமயத்தில் அவருக்கு பெரிதும் வசதி வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தாராம். அப்போது, அவருடைய மகள் கார்த்திகா தேவிக்கு மருத்துவராக வேண்டுமென்ற கனவு இருந்துள்ளது. சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்த காரணத்தினால் கார்த்திகா தேவியால் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாமல் போய்விட்டது.
கஸ்தூரிராஜாவிற்கு வசதி இல்லாததால் தனியார் கல்லூரியில் தனது மகளை படிக்க வைக்க முடியவில்லை. இப்படி ஒரு சமயத்தில் நடிகர் விஜயகாந்த் எதிர்ச்சியாக கஸ்தூரிராஜாவை சந்தித்துள்ளார். அப்போது, கார்த்திகா தேவி அழுது கொண்டிருப்பதை பார்த்த விஜயகாந்த் கஸ்தூரிராஜாவிடம் என்ன பிரச்சனை என்று கேட்க மருத்துவக் கல்லூரியில் சேர முடிய வில்லை என கூற உடனடியாக கார்த்திகா தேவிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
விஜயகாந்த் பலருக்கு பல நன்மைகளை செய்துள்ளார் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், இதுவும் ஒன்றாகும் விஜயகாந்த் தனக்கு உதவி செய்தது குறித்து தனுஷின் அக்கா கார்த்திகா தேவி இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மனம் உருகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.