பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி மரணமடைந்த செய்தி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு இரங்கல் அனைவரும் இரங்கல் தெரிவித்தோம். நேரில் அஞ்சலி செலுத்தியும் பலர் வந்தனர்.
விஜயகாந்த் மறைவிற்கு இரு முக்கிய நடிகர்களான விஜய் மற்றும் வடிவேலுவின் வரவேற்பை ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். விஜய் மட்டும் அன்று இரவு தன்னை உருவாக்கிய விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தி சென்றார். ஆனால், வடிவேலு விஜயகாந்த் இறப்பை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை.
இவர் வராததற்கு பல்வேறு காரணங்கள் தெரிவித்து வந்தாலும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவை கண்டபடி திட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வடிவேலு பரதேசி விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வராதது கண்டனத்திற்கு உரியது என்றும், வடிவேலுக்கு மரியாதை இன்னும் குறையும். நீ வரவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.
என் முன்னேற்றத்திற்கு கமல், மதுரைக்காரர் விஜயகாந்த் என்று சொன்னியே, இனிமேல் வடிவேலு படம் வந்தால் தமிழக மக்கள் பார்ப்பார்களா பணமும், சொத்தும் நகையும் உன்னை காப்பாத்தாது. பெயர் தான் காப்பாத்தும். 84 வயதான கவுண்டமணி வந்து அழுதார். அந்த வயதில் அவர் அங்கே சென்றார் அவரை விடவா நீ உயர்ந்து விட்டாய், சாவு நாடகமாடியவன். நீ ராஜ்கிரன் தயவால் நடிகர் ஆனாய் ராஜ்கிரனுக்கே நீ துரோகம். 5 லட்சம் வாங்குவது மட்டும் இல்லாமல் அவருக்கு மன உளைச்சலையும் கொடுத்து விட்டாய்.
மனமே இல்லாதவன் உனக்கு மனிதாபிமானம் இல்லை. விவேக்குடன் ஒன்றாய் நடித்தாய் அவர் இறப்புக்கும் வரவில்லை, மனோபாலா உன் மீது அன்பு வைத்திருந்தார் அவர் சாவுக்கும் வரவில்லை, போண்டாமணி நெஞ்சில் ஏறி மிதித்து இருக்கிறாய் அவன் சாவுக்கு நீ வரவில்லை என்று கண்டபடி பயில்வான் பேசி இருக்கிறார். நீ வெளியில் போனால் கேப்டன் இறப்புக்கு வரவில்லை என்று மக்கள் காரி துப்பமாட்டார்களா என்று பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.