மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.
லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம். அப்போது, சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம். காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்லுவார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்துதான் எங்களை வளர்த்துள்ளார் என்று பெருமிதத்துடன் சண்முக பாண்டியன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் இளைய மகன் சண்முக பாண்டியன் நீண்ட முடி மற்றும் தாடியை வைத்திருந்தார். தற்போது, அவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகவும், அடுத்து அவர் நடிக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ்காகவும் தான் இப்படி முடியை வளர்த்து வருகிறாராம்.
சசிகுமார் இயக்கும் குற்ற பரம்பரை வெப் சீரிஸ் பற்றி கேட்டதுமே விஜயகாந்த் தனது மகன் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம். ஆனால், அதற்கான சூட்டிங் துவங்குவதற்கு முன்பே அவர் காலமாகிவிட்டார். இப்படி மகனின் நடிப்பை பார்க்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார் என்று தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.