விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. கேப்டனின் நிறைவேறாத ஆசை குறித்து எமோஷனல் ஆன மகன்..!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சிறப்பான முறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கரகோஷங்களுடன் அவரது உடல் வீதியெங்கும் வரலாறு பேசும் சம்பவமாக இருந்தது.

லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழைக்குள் விதைக்கப்பட்டார் விஜயகாந்த். இவரின் மறைவால் தமிழகமே துக்கத்தில் உறைந்தது.

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், எங்கள் வீட்டில் வார இறுதியில் ஸ்பெஷலாக பிரியாணி செய்வோம். அப்போது, சாலையில் செல்பவர்களுக்கு நானும் எனது அண்ணனும் தான் எங்களுடைய கையால் உணவளிப்போம். காலையில் எழுந்த உடனே என்னுடைய அப்பா இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என்று சொல்லுவார். மற்ற உதவி செய்வதை சின்ன வயதிலிருந்து சொல்லிக் கொடுத்துதான் எங்களை வளர்த்துள்ளார் என்று பெருமிதத்துடன் சண்முக பாண்டியன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் இளைய மகன் சண்முக பாண்டியன் நீண்ட முடி மற்றும் தாடியை வைத்திருந்தார். தற்போது, அவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகவும், அடுத்து அவர் நடிக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ்காகவும் தான் இப்படி முடியை வளர்த்து வருகிறாராம்.

சசிகுமார் இயக்கும் குற்ற பரம்பரை வெப் சீரிஸ் பற்றி கேட்டதுமே விஜயகாந்த் தனது மகன் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம். ஆனால், அதற்கான சூட்டிங் துவங்குவதற்கு முன்பே அவர் காலமாகிவிட்டார். இப்படி மகனின் நடிப்பை பார்க்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார் என்று தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.