நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிகை விஜயலட்சுமி நடித்து பிரபலமானார். இவர் கன்னட நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, பூந்தோட்டம், கலகலப்பு, பிரண்ட்ஸ், மிலிடரி, பாஸ் என்கிற பாஸ்கரன், தம்பி கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் பிரபல கன்னட நடிகர் ஸ்ருஜன் லோகேஷ் என்பவரை மூன்று ஆண்டுகள் காதலித்து டேட்டிங் செய்துவந்தார். அவரை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட விஜயலக்ஷ்மி 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிட்டது.
இதையடுத்து கடந்த சில வருடங்களாக விஜயலட்சுமி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதாவது, நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமானை தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த விவகாரம் ஒரு முடிவில்லாமல் செல்கிறது.
இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்தது. ஆனால், தற்போது விஜயலட்சுமி சீமானை என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவருக்கு அரசியல் பலம் அதிகமாக இருக்கிறது.
அதனால், நான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்று பல்டி அடித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியை விட அவருடைய அதிகாரம் தான் ஓங்கி இருக்கிறது. நான் முதலமைச்சராக இருந்திருந்தால், இந்த விவகாரத்தை வேறு மாதிரி கொண்டு சென்றிருப்பேன். ஆனால், இப்போது என்னுடைய தோல்வியை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன் என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த சூழலில் திடீரென இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்ற ரீதியில் பேச்சுகளும் இணையதளத்தில் எழுந்து வருகிறது. தற்போது, சீமானை எதிர்க்க முடியாமல் விஜயலட்சுமி பின்வாங்கியது அவருடைய கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.