கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல் எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த “வீர தீர சூரன் பார்ட் 2” பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமானது. இத்திரைப்படத்தின் கதை விவாதம் பல நாட்களாக நடைபெற்று வந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் கதை விக்ரமிற்கு திருப்தியை தரவில்லை என்பதால் அக்கதையை மெருகேற்றி வந்தாராம் மடோன் அஸ்வின்.
ஆனால் அப்பொழுதும் விக்ரமிற்கு திருப்தி ஏற்படவில்லையாம். மேலும் விக்ரம் “தூள்” போன்ற ஒரு பக்கா கமர்சியல் கதையை கொண்டு வாருங்கள் என கூறினாராம்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மடோன் அஸ்வின்-விக்ரம் கூட்டணியில் ஒப்பந்தமான திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேறு ஒரு இயக்குனரை விக்ரமிற்கு கதை சொல்ல அனுப்ப, அந்த இயக்குனர் சொன்ன கதையையும் விக்ரம் நிராகரித்துவிட்டாராம். மீண்டும் பழைய ஃபார்முக்கு வர பக்காவான கமர்சியல் கதையில் நடிக்க வேண்டும் என விக்ரம் முடிவெடுத்துள்ளதால் தனக்கு வரும் கதைகள் நிராகரித்துவருவதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.