சினிமா / TV

செலவுக்கு காசு இல்ல தரீங்களா? ஜெயம் ரவி பற்றி பேசிய விக்ரம் – அப்போ ஆர்த்தி பண்ணதெல்லாம் உண்மை தானா?

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி விவாகரத்து விவகாரங்கள் தான் நாளுக்கு நாள் பேசப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் இந்த விவாகரத்து விஷயத்தில் புதுப்புது விஷயங்கள் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

குறிப்பாக ஜெயம் ரவியின் நடத்தையில் முன்னர் சந்தேகித்து அவர் பாடகி கெனிஷா உடன் தகாத உறவில் இருப்பதாக மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனால் ஜெயம் ரவி ரசிகர்களை இழந்தார். ஆனால், தற்போது எல்லோரும் ஜெயம் ரவி பக்கம் ஆதரவாக அவருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

காரணம் ஆர்த்தி அவரை மிகவும் மோசமாக கொடுமை செய்து வந்ததாகவும் தன்னை அடிமை போல் வைத்திருந்தார். தன்னிடம் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட இதுவரை இல்லை. எல்லாமே அவருடைய கண்ட்ரோலில் தான் இருக்கும். எனக்கு பத்து ரூபா காசு வேணும் என்றாலும் கூட நான் ஸ்கொய்ப் பண்ணினால் உடனே ஆர்த்திக்கு மெசேஜ் போய்விடும்.

உடனே அவர் எதுக்கு இதை பண்ண? என்ன செலவு?யார் கூட இருக்க? என்று கேள்வி கேட்பார். அதை என்னிடம் கேட்காமல் என்னுடைய அசிஸ்டன்ட் இதெல்லாம் கேட்டு என்னை அசிங்கப்படுத்துவார் என ஜெயம் ரவி கூறியதை அடுத்து பலரும் அவருக்கு ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள் .

இந்நிலையில் நடிகர் விக்ரம் சில நாட்களுக்கு முன்னால் ஜெயம் ரவி குறித்து விருது விழா ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, என்னிடம் காசு செலவுக்கு இல்லை. அந்த சமயம் ஜெயம் ரவியிடம் நான் செலவுக்கு பணம் கேட்டேன். அவரோ என்னிடம் 500 ரூபாய் தான் இருக்கு இருங்க என்னோட மனைவியிடம் கேட்டு வாங்கி வருகிறேன் என்று சொல்லி ஆர்த்தி இடம் தான் வாங்கி தந்தார்.

இதையும் படியுங்கள்: No Caste சான்றிதழ் வாங்கிய கயல் ஆனந்தி – குவியும் வாழ்த்துக்கள்!

அவர் எல்லாமே ஆர்த்தியிடம் தான் கேட்பார் என்று சொல்ல ஜெயம் ரவி கீழே இருக்கையில் அமர்ந்து சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் அப்போ ஜெயம் ரவி மனைவி தன்னை மிகவும் அடிமை போல நடத்துகிறார் என்று சொன்னதெல்லாம் உண்மைதான் போல பாவம் மனுஷன் ஆர்த்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் விவாகரத்து செய்திருக்கிறார் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.