பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக உதயமானவர் நடிகர் விமல். முதல் படமே நல்ல வெற்றிப் படமாக அமைந்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாற்றியது. அதன்பிறகு தொடர்ந்து எத்தன், வாகைசூடவா, தூங்கா நகரம் என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.
மேலும் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, சற்குணம் இயக்கத்தில் களவாணி, பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை என அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் Distributor – கள் மத்தியில் நம்பிக்கை நாயகனாக இருந்தார்.
ஆனால் காலத்தின் சூழ்ச்சியில், அதன் பிறகு தொடர் தோல்வி படங்களை கொடுத்து சோகத்தில் இருந்தவருக்கு மன்னர் வகையறா என்ற திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது, இருந்தும் படம் ஓடவில்லை. இந்நிலையில், விலங்கு வெப்தொடர் மூலம் ரீ என்ட்ரீ கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் விமல்.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் அந்தணன் youtube பேட்டி ஒன்றில் தினமும் காலையில் காரை எடுத்துக்கொண்டு தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களை கோடம்பாக்கத்தில் பார்த்தால் காரில் ஏற்றுக் கொண்டு ஜல்ஷாவாக குடித்துக்கொண்டே போவார் விமல் என்றும், பின்னர் சில நிமிடத்தில் இறக்கிவிட்டு கையில் 2000 பணத்தை கொடுத்து இன்னொரு நாள் கதை கூற சொல்லிவிட்டு அனுப்பி விடுவாராம்.
இதனால், அவரிடம் பலர் கதை கூற விரும்புவதில்லை என்றும், குடிக்கு அடிமையானதால் அவர் கையெழுத்து போட்ட பல சமயங்களில் நிதானம் இல்லாமல் இருந்தார் என்று தெரிவித்திருந்தார்.
இதனை கேள்விப்பட்ட நடிகர் விமல் துடிக்கும் கரங்கள் என்ற படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அவர்களிடம் பேசியுள்ளார். அதில், நான் குடித்து 45 நாட்களுக்கு மேலாகிறது. மது அருந்திவிட்டு தினமும் ஒவ்வொரு இயக்குனராக கூட்டி சென்று 2000 கொடுத்து அனுப்புவதாக அவதூறு பரப்புகிறார்கள். சில youtube பத்திரிகையாளர்கள் வாய்க்கு வந்தபடி youtube பில் எழுதுவதாகவும், ஒரு எக்ஸாம் அவர்களுக்கு வைக்க வேண்டும் என அரசிடம் கடிதம் எழுத இருப்பதாகவும் நடிகர் விமல் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
This website uses cookies.