மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் விநாயகன் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாது அங்கு தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பயணியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்புகாரை தொடர்ந்து கொல்லம் போலீஸார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அதன் பின் கொல்லத்தில் உள்ள அஞ்சலமூடு காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகும் கூட அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விநாயகன் இதற்கு முன்பே குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததற்காக அவரை போலீஸார் கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் விமான நிலைய அதிகாரி ஒருவருடன் வாக்குவாதம் செய்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
காமெடி நடிகர் டூ ஹீரோ தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வலம் வந்த சூரி “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
This website uses cookies.