சினிமா / TV

குடி போதையில் ஜெயிலர் பட வில்லன் செய்த அட்டகாசம்! குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீஸார்…

முன்னணி நடிகர்

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏன் கைது?

கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் விநாயகன் குடி போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாது அங்கு தங்கியிருந்த ஒரு வெளிநாட்டு பயணியிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இப்புகாரை தொடர்ந்து கொல்லம் போலீஸார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று அதன் பின் கொல்லத்தில் உள்ள அஞ்சலமூடு காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகும் கூட அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விநாயகன் இதற்கு முன்பே குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததற்காக அவரை போலீஸார் கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது. 

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் மது போதையில் விமான நிலைய அதிகாரி ஒருவருடன் வாக்குவாதம் செய்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் வெளிவந்தார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.