சினிமா / TV

விபின் குமார் எனது மேனேஜரே கிடையாது- உன்னி முகுந்தன் கொடுத்த அதிர்ச்சி! வழக்கில் ஒரு டிவிஸ்ட்…

மேலாளரை தாக்கிய உன்னி முகுந்தன்

மலையாளத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவரது மேலாளரான விபின் குமார், டொவினோ தாமஸ் நடித்த “நரிவேட்டா” திரைப்படத்தை தான் புகழ்ந்ததற்காக நடிகர் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உன்னி முகுந்தன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் எனது மேலாளரே இல்லை..

விபின் குமாரை தனது தனிப்பட்ட மேலாளராகவே நியமிக்கவில்லை என உன்னி முகுந்தன் விளக்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த விளக்கத்தில், “2018 ஆம் ஆண்டு நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்க தயாராகிக்கொண்டிருந்தபோது விபின் குமார் என்னை தொடர்புகொண்டு பல பிரபலங்களின் பி ஆர் ஓ ஆக தான் பணியாற்றியுள்ளதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன் பின் இந்த நபரால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. 

ஒரு சக ஊழியராகவும் நண்பராகவும் விபின் மிக மோசமான மன்னிக்க முடியாத செயலைச் செய்தார். இந்த நபர் மீது நான் எந்தவிதமான தாக்குதலையும் நான் நடத்தவில்லை. இந்த நபர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. 

விபின் ஒரு நடிகையிடம் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார். இந்த விவகாரம் எனக்கும் விபினுக்கும் இடையே சண்டைக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், என்னை அவதூறு செய்து என்னுடைய நற்பெயரை அழிப்பேன் என்று விபின் குமார் என்னை மிரட்டினார். என்னுடைய தொழில் வாழ்க்கையை அழிக்க ஒரு சிலர் இந்த நபருக்கு உதவுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். இது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.