Rolex-ஆ…. டில்லியா..? யார் மாஸ் கேரக்டர்… கார்த்தி முன்பு நடிகர் சூர்யா சொன்ன சூசக பதில்..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 10:04 am
Quick Share

மதுரை : விருமன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் சகோதரர்களான நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா மேடையில் கலகலவென பேசியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சூர்யாவின் 2டி நிறுவன தயாரிபில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்திக், இயக்குநர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, முத்தையா, சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விருமன் படத்தின் மூலம் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள விருமன் திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த விழாவின் தொடக்கத்திலேயே ரசிகர்கள் ரோலக்ஸ்… ரோலக்ஸ்… என கத்தி சலசலப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, அமைதியாக இருக்கும் படி சூர்யா கேட்டுக்கொண்டதை அடுத்து ரசிகர்கள் அமைதியாகினர்.

இதையடுத்து, மேடையில் பேசிய சூர்யா, உங்களை பல மணிநேரம் காக்க வைத்ததுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மதுரையில் கதைகளுக்கு பஞ்சம் கிடையாது. சிறு வயதிலிருந்து பல முறை இங்கு வந்து பாசத்தை பெற்று இருக்கிறேன். விருமன் இசைவெளியீட்டு விழா இங்கு நடப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். நடிகர் கார்த்தி தான் என்னைவிட சிறந்த நடிகர். இதை நான் பல முறை சொல்லி உள்ளேன்.

இந்த படத்திலும் கார்த்தி சிறப்பாக நடித்து இருக்கிறார். தன்னை தானே மீண்டும் மீண்டும் ரேவைண்ட் செய்து வரும் இயக்குனர் ஷங்கர். அப்படி பட்ட ஒரு ஆளுமையிடம் இருந்து வந்த ஆதிதி ஷங்கருக்கு இது முதல் படம் போல இல்லாமல் அழகாக நடித்து இருக்கிறார். அதேபோல, சூரி, சிங்கம் புலி, வடிவுகரசி என அனைவரும் அவர்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.

தேசிய விருது அறிவிப்பின் போது நான் ஊரில் இல்லை, பொண்ணு படிப்புக்காக நியூயார்க்கில் இருந்தேன். அந்த விஷயம் எனக்கு புரியவே 4 மணிநேரம் ஆச்சு. ஆனால், அதற்குள் நீங்கள் கொண்டாடிய விதம் மிக பெரிய சந்தோஷமா இருந்தது. இந்த அன்புதான் எனக்கு என்றும் வேண்டும், எனக் கூறினார்.

ரசிகர்கள் ரோலக்ஸ்..ரோலக்ஸ் எனக் கத்தியதால், உடனே சூர்யா கையில் கட்டி இருந்த ரோலக்ஸ் வாட்சை அனைவருக்கும் காட்டி, இந்த Rolex வாட்ச் உங்களாலதான் கிடைச்ச பரிசு, கமல் சார் கொடுத்த பரிசு, என்றார். மேலும், டெல்லி ரோலக்ஸ் என்ன செய்ய வேண்டும்…இணைந்து செய்யதை காலம் தான் அதை முடிவு செய்யும், எனக் கூறினார்.

Views: - 927

0

0