அடி மேல் அடிவாங்கும் விஷால்: நட்பு வட்டாரத்திற்குள் ஏற்பட்ட விரிசலுக்கு அது தான் காரணமாம்..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… டிரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.

ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.

அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.

பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இவர்கள் இருவரும் இனைந்து விஷாலை வைத்து லத்தி எனும் படத்தை தயாரித்திருந்தார்கள். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து படுதோல்வியடைந்த நிலையில், படக்குழு நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

லத்தி படத்தின் தோல்வியால் விஷால், நந்தா மற்றும் ரமணா நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நட்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் நடிகர் விஷாலுக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவர் மீதும் விஷால் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் லத்தி படத்தில் பணிபுரிந்து வந்த யூனிட்டுக்கு கூட ரூ. 1.5 கோடி வரை சம்பளத்தை பாக்கி வைத்துள்ளதாகவும், அவர்கள் விஷாலிடம் வந்து சம்பள பாக்கியை கேட்டதால், விஷால் இவர்கள் இருவர் மீதும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சரி, நாங்கள் வைத்தால் தவறா? கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!

வருகிற 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தேர்தல்…

8 hours ago

சமூக நீதி விடுதி; பெயரை மட்டும் மாற்றினால் சரியாகிவிடுமா? எல்.முருகன் சரமாரி கேள்வி!

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…

9 hours ago

முருகன் கோவிலுக்குள் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு! ஆனால் தமிழிசைக்கு அனுமதி? வெடித்த சர்ச்சை…

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…

10 hours ago

சொமேட்டோ, ஸ்விக்கிக்கு டாட்டா காட்டிய ஹோட்டல் உரிமையாளர்கள்?  உதயமான புதிய உணவு  டெலிவரி ஆப்!

சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…

11 hours ago

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு? நுகர்வோர் ஆணையத்தில் இருந்து பறந்த நோட்டீஸ்!

பண மோசடி வழக்கு  கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…

12 hours ago

இறந்தது தெரியாமல் 5 நாட்கள் கணவருடன் வசித்த மனைவி… மனதை பதற வைத்த சம்பவம்!

கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…

13 hours ago

This website uses cookies.