நிறைவேறிய விவேக் ஆசை;கண்ணீர் வடித்த ரசிகர்கள்;இப்படியா நடக்கணும்?,..

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா அலைக்கு முன் தொடங்கப் பட்டது இந்தியன் 2 திரைப்படம்.

திரைப்பட ஷூட்டிங்கில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.சென்ற வருடம் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் நேற்று திரையிடப் பட்டது.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நடிகர் விவேக்கின் நீண்ட கால ஆசை.அதை பல மேடைகளிலும் விவேக் சொல்லியிருப்பார்.அவருடைய ஆசை இந்தியன் 2 படத்தில் நிறைவேறியது. ஆனால் திரையில் அவரை பார்க்க விவேக் உயிருடன் இல்லை. உங்களின் ஆசை இப்படியா நிறைவேற வேண்டும்.?திரையில் உங்களை பார்க்கும்போது நீங்கள் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக் இறந்தபோதிலும் அவரின் காட்சிகளை நீக்காமல் அப்படியே வைத்தார் ஷங்கர். அதற்காக அவருக்கு விவேக் ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.திரையில் இந்தியன் தாத்தாவுடன் விவேக்கை பார்த்த ரசிகர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நெகிழ்ந்து அழுதனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.