லீக்கான மார்பிங் வீடியோ.. வேதனையுடன் விளக்கம் கொடுத்த தொகுப்பாளினி..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரான ரோகித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், அவர் நடக்க முடியாமல் செவிலியர்கள் உதவியுடன் நடந்து வருகிறார். அது குறித்து அவர் கூறியதாவது:- தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது.

சிறிது காலம் நலமாக இருந்தேன். அதன் பிறகு தான் எனக்கு நவியா பிறந்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் என் முதுகு தண்டுவட நிபுணருடன் ஆலோசனை செய்தேன். அப்போது அவர் இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை. இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

வேறு ஒருவருடைய முதுகுஎழும்பை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்கிறார். எனது ஐந்து வயது மகள் நவியா என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரது ரசிகர்கள் கமெண்டில் தற்போது ஆறுதலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்யாணி உடல் நிலை குறித்து இணைய தளங்களில் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து கல்யாணி வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் “எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் இறந்த யாரோ ஒருவரின் உடம்பில் எனது முகத்தை மார்பிங் செய்து ஒட்டி உள்ளனர். எனது உடல் நிலை குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.