தமிழ் சினிமாவின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலம் ஆகினார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது.
விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது ரோல் பிரபலமானதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார்.
தற்போது 36 வயதாகும் மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி தற்போது தனது இரண்டாம் திருமண ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது,
“எனக்கும் சில தேவைகள் இருக்கு. ஆனால் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. காரணம்,வருகிற நபர் எனக்கு கணவராக இருப்பார். ஆனால், அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் உண்மையிலே நடக்குமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது.
மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)
ஏனென்றால், என் மகன் என்னை நம்பி தான் இருக்கிறான். என்னை மறுமணம் செய்துக்கொள்ள இரண்டு பேர் கேட்டார்கள். திருமணம் செய்துக்கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.ஆனால் ஏற்கனவே என் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டதால் மறுமணம் என்பது சரியாக வருமா?என பெரும் குழப்பம் மனதில் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!
மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்கான காரணத்தை கூறிய அவர் தனக்கு சிறுவயதில் இருந்து அழகான ஆடை அணிவது மிகவும் விருப்பம் இருக்கிறது. எனக்கு நயன்தாரா மிகவும் பிடிக்கும் அவர்களை மாதிரி நானும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இனி நான் வாழப் போகும் காலகட்டத்தில் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன் என்று மகேஸ்வரி தெரிவித்து இருந்தார்.
மேலும், கிளாமர் போட்டோஷூட் பற்றி நிறைய கமெண்ட்களை நான் பார்க்கவே மாட்டேன். எங்கே போனாலும் கமெண்ட் போட தான் செய்வாங்க, சேலை கட்டினாலும் சரி. இங்க தெரியுது அங்க தெரியுதுன்னு தான் சொல்லுவாங்க, இந்த கமெண்ட் எல்லாம் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் மகனுக்கு அது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஆணிடம் இந்த சீன் பண்ணலாமா என்று கேட்க முடியுமா? மேலும், என் மகனுக்கு என் அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனையாக இருந்தால், நான் அது பற்றி விவரிப்பேன். அது கஷ்டமாக இருந்தால் நான் யோசிப்பேன். வேறு யாருக்கும் கஷ்டமாக இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை என்று வெளிப்படையாக VJ மகேஸ்வரி பேசியுள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.