தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் சீரியல் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.
பிரபலமான தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, vj ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். vj ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள்.
சென்னை போட்டியில் 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் vj ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
vj ரம்யா திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார். ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். 2007 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.
அதன் பின்னர் vj ரம்யா மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
நடிகை ரம்யாயாவும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். ரம்யா திருமணத்திற்கு கூட நடிகை சமந்தா வந்திருந்தார் அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். திருப்பதிக்கு கடந்த சில காலமாக இவர்கள் அடிக்கடி சென்று வருகிறார்கள்.
இதுவரை திருப்பதி மலைக்கு சமந்தாவுடன் சேர்ந்து ரம்யா 3 முறை நடந்தே சென்று ஏறி இருக்கிறார். அதிலும் ரம்யாவும், சமந்தாவும் திருப்பதி மலைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ரம்யா 3 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை 2.5 மணி நேரத்திற்கும் குறைவாக ஏறி விட்டதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, சமந்தாவும் நானும் திருப்பதி மலையை ஒன்றே முக்கா முதல் 2 மணி நேரத்திற்குள் ஏறி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது எப்படி 3500 படிக்கட்டுகளை 2 மணி நேரத்தில் ஏற முடியும். ஒரே உருட்டா இல்ல இருக்கு என்று விமர்ச்சித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.