தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் சீரியல் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.
பிரபலமான தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, vj ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். vj ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள்.
சென்னை போட்டியில் 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் vj ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
vj ரம்யா திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார். ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். 2007 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.
அதன் பின்னர் vj ரம்யா மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
நடிகை ரம்யாயாவும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். ரம்யா திருமணத்திற்கு கூட நடிகை சமந்தா வந்திருந்தார் அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். திருப்பதிக்கு கடந்த சில காலமாக இவர்கள் அடிக்கடி சென்று வருகிறார்கள்.
இதுவரை திருப்பதி மலைக்கு சமந்தாவுடன் சேர்ந்து ரம்யா 3 முறை நடந்தே சென்று ஏறி இருக்கிறார். அதிலும் ரம்யாவும், சமந்தாவும் திருப்பதி மலைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ரம்யா 3 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை 2.5 மணி நேரத்திற்கும் குறைவாக ஏறி விட்டதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, சமந்தாவும் நானும் திருப்பதி மலையை ஒன்றே முக்கா முதல் 2 மணி நேரத்திற்குள் ஏறி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது எப்படி 3500 படிக்கட்டுகளை 2 மணி நேரத்தில் ஏற முடியும். ஒரே உருட்டா இல்ல இருக்கு என்று விமர்ச்சித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.