நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் ஜோடியாக அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் புதுமண தம்பதிகள் பிரபல சேனலுக்கு பேட்டி கொடுத்தனர். அதில் தங்கள் காதல் பயணம் முதல் திருமணம் வரை பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வருகிறார்களாம். மற்ற காதலர்களை போன்று good morning… good night இதெல்லாம் சொல்லிக்கொள்ளவே மாட்டார்களாம். ரொம்ப mature நடந்துப்போம் என கூறினார்கள். சூது கவ்வும் படத்தில் தான் இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போவே love at first sight ஏற்பட்டதாக அசோக் செல்வன் கூறினார். நண்பர்கள் பார்ட்டி ஒன்றில் கீர்த்தி அழகாக சேலை உடுத்தி இருந்ததை பார்த்து மயங்கிவிட்டாராம் அசோக். பின்னர் சில நாட்கள் படங்கள் சார்ந்து அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டதாம்.
இதனிடையே இருவருக்குள் சண்டை வந்து 3 ஆண்டுகள் பேசிக்கொள்ளாமல் பிரிந்துவிட்டார்களாம். பின்னர் மீண்டும் ஒரு சந்திப்பில் காதல் மலர அது திருமணம் வரை கொண்டு சேர்த்துள்ளது. இதனிடையே அவ்வப்போது கீர்த்தி சுரேஷ் மீதுள்ள காதலால், propose , வெளிநாடுகளுக்கு அவுட்டிங், சர்ப்ரைஸ் கிப்ட் என அசோக் செல்வன் கீர்த்தியை உருக உருக காதலித்து கட்டினாள் இதுவரை தான் கட்டுவேன் என கீர்த்தி மனதில் ஆழமான காதலை உருவாக்கிவிட்டராம். இந்த அழகான ஜோடி திருமணத்திற்கு முன்னர் ஏற்பட்ட சண்டையால் 3 ஆண்டுகள் பிரிந்துவிட்டார்களாம். அப்பறம் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதன் பின் திருமணம் செய்து கொண்டோம் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளனர். இந்த அழகிய ஜோடியின் இந்த காதல் பயணம் குறித்த நேர்காணல் வீடியோ தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.