நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.
நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது. இருந்தாலும் போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார். அதே போல் அவரும் அந்த காலத்தில் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தவர் தான்.
ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினியுடன் மாறி மாறி நடித்து வந்தார். அப்போது அவர்கள் இருவருடனும் ஸ்ரீ தேவி காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அதிலும் கமல் ஹாசனுடன் தான் அதிக கிசு கிசு செய்திகள் வெளியானது. கமல் – ஸ்ரீ தேவிக்கு விரைவில் திருமணம், பெற்றோர்கள் சம்மதித்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் டிசைன் டிசைனாக வெளிவரும்.
பல வருடத்திற்கு பின்னர் ஸ்ரீதேவி மறைவுக்கு பின்னர் அவருடனான கிசு கிசு செய்திகள் குறித்து கமலிடம் கேட்டதற்கு, உண்மையில் அண்ணன் தங்கை உறவு முறையில் தான் பழகி வந்தோம். எங்களது திரைப்படங்கள் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக நாங்கள் காதலர்கள் போன்று நடந்துக்கொள்வோம். அப்படி செய்ததால் தான் எங்களது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனால் காதல் வதந்திகளை அப்படியே விட்டுவிட்டோம் என கமல் ஹாசன் ஸ்ரீதேவி மறைவுக்கு பின் இதை கூறியுள்ளார். ஸ்ரீ தேவி பாலிவுட்டிற்கு சென்று போனி கபூரை திருமணம் செய்த பின்னர் தான் இந்த வதந்திகள் எல்லாம் ஓய்ந்ததாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.