அங்கிள் எனக்கு HELP பண்ணுங்க.. சிறுமியின் உயிரை காக்க ‘எலும்பு மஜ்ஜை தானம்’ செய்த முதல் நடிகர்..!

இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார். அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது.

இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 57 வயதாகும் சல்மான் கான் இன்னுமும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சல்மான்கான் சினிமா துறை மட்டுமின்றி சமூக நற்பணிகளிலும் அர்ப்பணிப்பு கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

தன்னலமற்ற இவர் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டது. சிறுமியின் உயிரை காக்க அப்போது, நடிகர் சல்மான் கான் அவரது கால்பந்து குழுவினரை நன்கொடை அளிக்க ஊக்குவித்தார்.

இருப்பினும், கடைசி நேரத்தில் குழுவினர் பின் வாங்க சல்மான் கான் அவரது சகோதரர் உடன் இணைந்து எலும்பு மஜ்ஜையை தானம் செய்தனர். அதனால், சல்மான்கான் முதன் முதலில் எலும்பு மஜ்ஜை தானம் செய்த இந்திய சினிமா நடிகர் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், அவரது தொண்டு அறக்கட்டளை பொது மக்களுக்கு ஆதரவு சுகாதாரம் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. மேலும், அறக்கட்டளையின் முயற்சிகள் மூலம் அறுவை சிகிச்சைக்கு நிதியளிப்பது போன்ற உதவிகளை சல்மான்கான் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.