நயன்தாரா குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது இவருதான்? வெளியான பரபரப்பு தகவல்..!

Author: Vignesh
12 October 2022, 6:45 pm
Nayanthara__Vignesh_Shivan_updatenews360
Quick Share

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Nayanthara-Twins-4-Updatenews360

விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

இந்நிலையில், வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.

nayanthara_updatenews360

வாடகைத்தாய் மூலமாக திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு எப்படி 4 மாதங்களில் பெற்றோர்கள் என சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது யார் என்கிற விவரம் தற்போது வெளியே கசிந்திருக்கிறது.

nayanthara_updatenews360

கேரளாவில் உள்ள நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த விஷயம் பற்றி முடிவெடுத்து இரண்டு குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறாராம் நயன்தாரா.

Views: - 541

0

0