பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் கடந்த வாரம் திடீர் மரணமடைந்தது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து நெற்றியில் அடிப்பட்டு தான் இறந்தார் என தெரியவந்தது.
மேலும் தனியாக வசித்து வந்த வாணியம்மாவின் கணவர் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாககவும், அவருக்கு தினமும் யாராவது கால் பண்ணி செல்போனில் பேசிக் கொண்டிருப்பார் என பணிப் பெண் தகவல் தெரிவித்திருந்தார்.
வாணியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை என்பது அறிந்த விஷயமே. ஆனால் தற்போது நான் தான் அவரது மகள் என பிரபல செய்திவாசிப்பாளர் ரத்னா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி வாசிப்பாளரான ரத்னா, பிரபல தொலைக்காட்சியில் திரை விமர்சனம் தொகுத்து வழங்கியவர்.
90ஸ் கிட்ஸ்க்கு மத்தியில் பிரபலமான செய்தி வாசிப்பாளரான ரத்னாவும் வாணியம்மாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இது குறித்து செய்தி வாசிப்பாளர் ரத்னா பேசும் போது, எந்த குழந்தைகளாக இருந்தாலும், தனது குழந்தையாகவே பார்த்து கொள்வார் வாணியம்மா. எங்கு போனாலும் என்னையும் கூட அழைத்து செல்வார்.
வீட்டில் கொலு பொம்மை வைக்கும் போது என்னை அழைப்பார். இப்படியே எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் எனக்கு அம்மா மாதிரி, சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவித்த போதும் கூட அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்.
அப்போது உடம்பு நல்லாதான் இருக்கு, கொஞ்சம சளி இருக்கு என கூறியுள்ளார். மேலும் வாணியம்மா தனது புடவைகளை எனக்கு தருவார், அதை உடுத்திக் கொண்டு செய்தி வாசித்துள்ளேன் என ரத்னா கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.