சினிமா / TV

சம்பளமே இல்லை; அட்வான்ஸ் கூட கொடுக்கலை- ஹாலிவுட் பட வாய்ப்பு? ஃபகத் ஃபாசில் ஓபன் டாக்…

நடிப்பு அரக்கன்

நடிப்பு அரக்கன் என்று பெயர் பெற்ற ஃபகத் ஃபாசில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் சமீபத்தில் வடிவேலுவுடன் “மாரீசன்” திரைப்படத்தில் நடித்திருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்றது.

ஹாலிவுட் பட வாய்ப்பு

இதனிடையே ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குனரான அலெஹான்ட்ரோ இனாரிட்டு என்பவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அலெஹான்ட்ரோ இனாரிட்டு தன்னுடைய “தி பேர்ட் மேன்”, “தி ரெவனன்ட்” ஆகிய திரைப்படங்களுக்காக ஆஸ்கர் வாங்கியவர். இவர் டாம் குரூஸை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். அத்திரைப்படத்தில்தான் ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஃபகத் ஃபாசில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியே வந்துவிட்டதாக கூறியுள்ளார். 

ஏன் வெளியேறினேன்?

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஃபகத் ஃபாசில், “ஆடிஷனுக்கு பிறகு அந்த இயக்குனருக்கு என்னை பிடிக்கவில்லை. என்னுடைய ஆங்கில உச்சரிப்புதான் அதற்கு காரணம். ஆதலால் என்னை 4 மாதங்கள் அமெரிக்காவில் சம்பளமே இன்றி தங்க சொன்னார்கள். இந்த படத்துக்காக அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. ஆதலால்தான் அந்த படத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். மேலும் அந்த ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான எந்த ஒரு உந்துதலும் எனக்குள் ஏற்படவில்லை” என கூறியுள்ளார். இவரது பேட்டி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.