ஏய்… யாருக்கு அறிவில்ல? ஜீவா சொன்ன அந்த வார்த்தை – கொந்தளித்த தாய்க்குலம்!

சினிமாவில் சமீப காலமாக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் ரீதியான தொல்லைகளை சினிமா நடிகைகள் மட்டுமல்லாது தொழில்நுட்ப பெண் கலைஞர்களுக்கும் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் சந்தித்து வருகிறார்கள்.

2017ல் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த திரைத்துறை துறையை உலுக்கியது. இதனால் கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டி என்ற குழு அமைத்து பாலியல் தொல்லை பிரச்சனைகளை விசாரிக்க ஏற்பாடுகள் செய்தனர். அதை எடுத்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதிலிருந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக தெரிவித்து பேரதிர்ச்சி கிளப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டுள்ள வரும் நேரத்தில் தற்போது நடிகர் ஜீவாவிடம் பத்திரிக்கையாளர் இது குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் இத்தகைய பாதிப்புகள் இல்லை. பாலியல் தொல்லையே இல்லை என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் முன்னதாக இந்த கேள்விக்கு பதில் சொல்லவே மறுப்பு தெரிவித்து வந்த ஜீவாவை விடாப்பிடியாக பத்திரிகையாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இதுபோன்ற தொல்லை தமிழ் சினிமாவில் இல்லை எனக் கூறியதை அடுத்து அங்கு பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே நடிகர் ஜீவாவுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட ஜீவா கடுமையான வார்த்தைகளால் பத்திரிகையாளரை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா? இதுபோன்ற கேள்வி எந்த இடத்தில் வந்து கேட்கணும் என்று விவஸ்தை இல்லையா?என கடுமையாக திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதையடுத்து தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என ஜீவா எப்படி கூற முடியும்? என பலரும் அவரை விமர்சித்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பல பெண் பிரபலங்கள் ஜீவாவை எதிர்த்து கேள்வி எழுப்ப வருகிறார்கள். தற்போது இச்சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தவகையில் பிரபல பாடகி சின்மயி ஜீவாவின் இந்த பதிலுக்கு கோபத்துடன் தனது twitter பக்கத்தில்… தமிழ் சினிமாவில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என்று அவர் எப்படி கூறுகிறார் என்று எனக்கு புரியவே இல்லை. என ஜீவாவை எதிர்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் பாலியல் ரீதியான தனது அனுபவங்களை வெளிப்படையாக தெரிவித்து ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார் நடிகை சின்மயி .
இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.