தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பின்புலம் இருந்தாலும் தனது சொந்த முயற்சியால் தான் முன்னேறி நல்ல இடத்திற்கு வருவேன் என்பதை லட்சியமாக வைத்து அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் நடிகை ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் சொந்த மச்சான். ஆம், நடிகை ஷாலினியின் அண்ணன் தான் ரிச்சர்ட் ரிஷி.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி படத்தில் நடித்து விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது இயக்கத்திலே ருத்ர தாண்டவம் என்ற ஜாதிவெறி மற்றும் தலித் விரோத உணர்வுகளைப் பரப்பிய படத்தில் நடித்ததால் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வந்த ரிச்சர்ட் ரிஷி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக முத்த புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்து காதலை உறுதிப்படுத்தியிருக்கிறார். அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் முழுக்க வைரலாக ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் வீக் எண்டில் ரொமான்டிக் அவுட்டிங் சென்ற போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலை பொழிந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், என்ன தலைவா உனக்கு ஊருல எந்த பொண்ணும் கிடைக்கலையா? என ட்ரோல் செய்து இது அஜித் சாருக்கு தெரியுமா? என விமர்சித்துள்ளனர். மேலும் ” ரிச்சர்ட் நீங்க தான் அடுத்த Accident” கூடிய விரைவில் உங்களை பாலிமர் செய்தியில் பார்க்கிறோம் என விமர்சித்துள்ளனர்.
நடிகை ஷாலினியின் தம்பியும் நடிகரமான ரிச்சர்ட் ரிஷி நெருக்கமாகவும் யாஷிகாவிற்கு முத்தம் கொடுப்பது போலவும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதாக பகிரப்பட்டு கேலியும் கிண்டலும் செய்து வந்தநிலையில், இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது குறித்தும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்து சில நொடிகள் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், கன்னட இயக்குனர் வினை பரத்வாஜ் இயக்கத்தில், நடித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த படத்தின் புகைப்படத்தை தான் பகிர்ந்ததாகவும் கதைப்படி தானும் யாஷிகாவும் சுற்றுலா செல்வது போல் எடுக்கப்பட்டதாகும் செல்பி எடுப்பது போன்ற காட்சிகள் அதிகப்படியாக இருந்ததாகவும், மற்றபடி தனக்கும் யாஷிகாவிற்கும் எந்த காதலும் கிடையாது கல்யாணமும் கிடையாது என்றும், வெளியூரில் இருந்ததால் இது பற்றி உடனே பேச முடியாமல் போனதாகவும் தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.