சினிமா / TV

தமிழில் சரிந்துப்போன மார்க்கெட்? வேறு மாநிலத்திற்கு தாவிய யோகி பாபு?

விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் யோகி பாபு. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு அதன் பின் டாப் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். அது மட்டுமல்லாது ஹிந்தியில் ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார். இவ்வாறு மிகவும் பிசியான நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. 

எனினும் சமீப காலமாக அவரது நசைச்சுவை அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுகின்றன. சமீபத்தில் அவர் விஜய் சேதுபதியின் “தலைவன் தலைவி” திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். ஆனால் அதில் அவரது காமெடி ரசிக்கும்படியாக இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். எனினும் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளில் பிசியாக வலம் வருகிறார் யோகி பாபு. 

இந்த நிலையில் யோகி பாபு தற்போது ஒரு தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமாகவுள்ளார். அதாவது பிரபல தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தமும் இயக்குனர் முரளி மனோகர் ரெட்டி என்பவரும் இணைந்து “குர்ராம் பாபி ரெட்டி” என்ற திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர். 

இத்திரைப்படத்தை முரளி மனோகர் ரெட்டி இயக்கவுள்ளார். இதில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக யோகி பாபுவும் பிரம்மானந்தாவும் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் யோகி பாபுவுக்கு பிரம்மானந்தன், தனது சுயசரிதையான “நான் பிரம்மானந்தம்” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.