பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேர்த்தியான விமர்சனம் மற்றும் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதில் கை தேர்ந்தவராக வலம் வந்த கௌஷிக் திடீரென மரணம் அடைந்திருப்பது இணையதள வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக ஆகஸ்ட் 15 மாலை மதியம் 3 மணி அளவில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் இவரது இறப்பு செய்தி இவரை பின் தொடரும் ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வந்த கௌஷிக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவுக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தில் பிரியா விடை பெற்ற கௌஷிக் வெறும் 35 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.