சினி அப்டேட்ஸ்

’வேண்டுமென்றே ஒரு நாள் சிறை’.. அல்லு அர்ஜூன் பகீர் குற்றச்சாட்டு!

ஜாமீன் நகல் நேற்றிரவே கிடைத்தும், இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு அல்லு அர்ஜுன் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்: கடந்த டிசம்பர் 5ஆம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ப்ரீமியம் ஷோ சந்தியா என்ற தியேட்டரில் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தை காண ரசிகர்களுள் ஒருவரான ரேவதி, அவரது கணவர் பாஸ்கர் மற்றும் இரு மகன்களுடன் வந்திருந்தார். அப்போது திடீரென அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு சர்பிரைஸ் விசிட் அடித்தார். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவரைக் காண முண்டியடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரேவதியும், அவரது மகனும் சிக்கி மயங்கி உள்ளனர். பின்னர், அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் ரேவதி உயிரிழந்தார். அதேநேரம், அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரசிகையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் அறிவித்து இருந்தார். இதனிடையே, அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது இந்த நிலையில், நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: திரை விமர்சனம்:ரசிகர்களை கொண்டாட வைத்ததா..சூது கவ்வும் 2..!

இது தெலுங்கு சினி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, அல்லு அர்ஜுனுக்கு நேற்று இரவு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை அவர் செஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் “செஞ்சல்குடா சிறை நிர்வாகத்திற்கு நேற்று இரவே தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் நகல் கிடைத்துவிட்டது. இருப்பினும், அல்லு அர்ஜுனை சிறையில் இருந்து விடுவிக்கவில்லை. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

ஏனென்றால், ஜாமீன் கிடைத்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது. இதற்காக சிறை நிர்வாகத்தின் மீது தகுந்த ச்ட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்” என அல்லு அர்ஜுனின் வழக்கறிஞர் அசோக் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

9 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

9 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

11 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.