சினி அப்டேட்ஸ்

கொஞ்சம் இத பண்ணுங்க அனிருத்.. ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

அனிருத் கிளாசிக்கல் இசை படித்து, அதனைச் செய்ய வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை ஒட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக் குழுவினர் உடன் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பேசினார்.

அப்போது அவர், “இப்போது அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். அவர் இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில் நிலைத்து நிற்பது என்றால், திறமை இல்லாமல் அது நடக்காது. அதையெல்லாம் செய்துவிட்டு, தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் எனச் சொல்லும் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது.

உங்களுடைய வெற்றிக்கு எனது பாராட்டுகள். உங்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய்ச் சேரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாலியல் தரகராகவே மாறிய தோழி.. பேரம் பேசி வன்கொடுமை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

ஜெயம் ரவி, நித்யா மேனன், ஜான் கொக்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.