ஏ.ஆர்.முருகதாஸ் எனது இதயத்தைப் பார்த்தார், எனது உருவத்தை அல்ல என இந்தி ஷோவில் உருவகேலிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இயக்குநர் அட்லீ பதிலளித்துள்ளார்.
மும்பை: தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த அட்லீ, ஜவான் மூலம் பாலிவுட்டிலுக் கொடி கட்டிப் பறந்தார். அந்த வகையில், பாலிவுட் நடிகர் வருண் தவானை வைத்து ‘பேபி ஜான்’ என்னும் படத்தைத் தயாரித்து வந்தார். இயக்குநர் காலீஸ் இயக்கும் இப்படம், 2016ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘தெறி’ படத்தின் ரீமேக் ஆகும்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ள இப்படம், டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் அட்லீ உள்பட படக்குழுவினர் மும்பையில் இயங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் தி கிரேட் இந்தியன் கபில் சர்மா ஷோவில், படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் தொகுப்பாளர் கபில் சர்மா, ‘நீங்கள் ஏதாவது ஸ்டாரைச் சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ எங்கே என தேடிக் கேட்டிருக்கிறார்களா?” என சர்ச்சைக்குரிய வகையில், உருவகேலி செய்யும் பொருட்டு கேள்வி எழுப்பினார்.
இதனை உணர்ந்த அட்லீ, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. என்னுடைய முதல் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் தான். அவருக்கு என்னுடைய கதை பிடித்திருந்தது. எனது உருவத்தைப் பார்க்காமல் என்னுடைய இதயத்தை அவர் பார்த்தார்’ என பதிலடி கொடுத்து உள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு, உருவகேலி செய்பவர்களுக்கு செருப்படி என்னும் வகையில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இதில் விஜய் ஸ்டைலில் அட்லீ கூறிய குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அரசு சொத்தை விலைக்கு கேட்டது ஒரு காமெடி.. விக்னேஷ் சிவன் புது விளக்கம்!
அட்லீ குட்டி ஸ்டோர்: அதில், “பணக்கார ஒருவர், குளிரில் நடந்து சென்ற ஏழையப் பார்க்கிறார். அவரிடம், உங்களுக்கு போர்வை இல்லையா எனக் கேட்கிறார். எனவே, தான் எடுத்து வருவதாக அந்த பணக்காரர் சொல்கிறார். ஆனால், வீட்டுக்குச் சென்றதும், அந்த பணக்காரர் ஏழையை மறந்துவிட்டார்.
மறுநாள் அந்த பணக்காரருக்கு, தான் கொடுத்த உறுதி நினைவுக்கு வர ஏழையைச் சென்று பார்க்கிறார். ஆனால், அங்கு அவர் இறந்திருக்கிறார். இதில் இரண்டு நீதிகள் உள்ளன. ஒன்று, யாருக்கும் வாக்குறுதி கொடுக்கக்கூடாது. மற்றொன்று, நம் வாழ்வில் சம்பந்தமே இல்லாத நபரை எல்லாம் நம்பி இருந்துவிடக்கூடாது” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.