சினி அப்டேட்ஸ்

கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தன்னைப் பற்றியும், தனது சாதியைப் பற்றியும் அவதூறாகப் பேசுவதாக பாடகி இசைவாணி அளித்த புகாரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னைப் பற்றியும், தான் சார்ந்த சாதியைப் பற்றியும் அவதூறாக சிலர் பேசுவதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் பேரில், சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

இசைவாணி விவகாரம்: கடந்த 2019 ஆண்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மயிலாப்பூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், ‘ஐ அம் சாரி ஐயப்பா’ (I am sorry Ayyappa) என்ற பாடலை பாடி இருந்தார். தொடர்ந்து, இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடியும் வந்தார்.

இந்த நிலையில், இந்தப் பாடல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதனால் இசைவாணியைச் சுற்றி சர்ச்சையும், விமர்சனங்களும் அதிகரித்தன. குறிப்பாக, இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையிலு, ஐயப்பன் கோயில் மரபை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும், இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இதனையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசைவாணி புகார் ஒன்றையும் அளித்திருந்தார். அதில், கானா பாடல்களும், சமூக விழிப்புணர்வு பாடல்களும் தான் பாடி வருவதாக குறிப்பிட்டுள்ள இசைவாணி, கடந்த 2019ஆம் ஆண்டு ‘I am sorry ayyappa’ பாடல்களை பாடியதாகவும், சமூக வலைத்தளங்களில் அந்தப் பாடல் பரவி வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு எண்களிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: மாமியார் கண்முன்னே மருமகள் செய்த காரியம்.. கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்ததன் பின்னணி என்ன?

மேலும், தன்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் சமூக விரோதிகள் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதேநேரம், பாடல் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வேண்டுமென்றே சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்தவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சிலர் செயல்பட்டு வருவதாக புகாரில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

17 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

18 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

18 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

18 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

19 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

20 hours ago

This website uses cookies.