சினி அப்டேட்ஸ்

மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்…. பூஜையிலே இம்புட்டு அளப்பறையா?

தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்து பெருமளவில் பிரபலமானவர் தான் கூல் சுரேஷ். இவர் 2001 ஆம் ஆண்டில் சுரேஷ் சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதில் அவர் கல்லூரி ரவுடியாக நடித்திருப்பார் .

மேலும், காக்க காக்க, தேவதை கண்டேன், திருடா திருடி, சிங்கம் புலி, காதல் அழிவதில்லை, பம்பரக் கண்ணாலே, பரமசிவம், பச்சைக்கிளி முத்துச்சரம், தீபாவளி ,தொட்டால் பூ மலரும், வேங்கை, சந்திரமுகி 2. உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் குணச்சித்திர நடிகராகவும் , துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து அசத்திருக்கிறார் .

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி இருந்தார். பொதுவாக கூல் சுரேஷ் எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப வித்யாசமான கெட்டப்பிலோ அல்லது ஏதேனும் அந்த படம் சம்பந்தப்பட்ட பொருட்களுடன் சென்று அங்குள்ள அனைவரையும் வியப்பில் அழுத்துவார்.

அதாவது, விஜய்யின் கோட் திரைப்படத்திற்கு போகிறார் என்றால் அவர் ஒரு ஆடு உடன் சென்று அங்கு படத்தை பார்ப்பார். இப்படி அவர் பல படங்களுக்கு செய்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். இதனால் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசப்படும் நடிகராகவும் கூல் சுரேஷ் வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஷ் தற்போது ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார்.

ஆம், அதாவது பிரபல YouTubeரும் , சர்ச்சைக்குரிய. நகரமான டிடிஎப் வாசன் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்த திரைப்படமான மஞ்சள் வீரன் திரைப்படத்தில் அவர் விலகியதை அடுத்து தற்போது அந்த ரோலில் நடிகர் கூல் சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இன்று படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் கூல் சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது. அந்த படத்தின் பூஜையில் வழக்கம் போல கொஞ்சம் ஓவராக பேசி அலப்பறை செய்தார் கூல் சுரேஷ். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அது தான்…. உங்க மனசுக்குள்ள ஒன்னு நினைப்பீங்க இல்ல அதுதான் இது….. அது என்ன அப்படிங்கறதை விரைவில் உங்களுக்கு செய்தி வரும் wait and see .

மஞ்சள் வீரனே வா… மாமன்னரே வா….. மகாதேவனே மாமல்லபுர சிற்பமே வா…. மதுரையின் வீரமே…. மங்காத செல்வமே வா…. மங்கையர்களின் இளவரசனே வா…. இப்படி பல செல்வங்களுக்கு சொந்தக்காரர் செந்தில் செல்வம் அவர்கள். இதற்கு மேல் சொன்னால் உங்களுக்கு என்ன விஷயம் என்று தெரிந்துவிடும் பொறுத்திருந்து பாருங்கள் எனக்கூறி ஓவர் அலப்பறை செய்து பேசிய இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ் பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது “மஞ்சள் வீரன் மெண்டல் வீரன் ஆன தருணம்” என்றெல்லாம் அவரை ட்ரோல் செய்து…. இவனையெல்லாம் நம்பி படத்தை எடுக்குறாங்களே அவங்கள சொல்லணும் என விமர்சித்த வருகிறார்கள் இதுவும் அந்த வீடியோ:

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.