சினி அப்டேட்ஸ்

3 வது முறையாக எஸ்கேப் ஆன தனுஷ் – ஐஸ்வர்யா – விவாகரத்து வேண்டாம்னா சொல்லிட்டு போங்கைய்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.

தோலுக்கு மேல் மகன்கள் வளர்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து தனுஷ் வெற்றி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாகவும் டாப் அந்தஸ்திலும் இருந்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா இயக்குனராக சில திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா மக்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

விஷயம் இப்படியாக இருந்து வந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விடப் போவதாக அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தனர் .கடந்த 2002 ஆம் ஆண்டு தான் இவர்கள் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் நிரந்தர பிரிவு இல்லை இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என பேசப்பட்டு வந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே ஆஜராகவில்லை.

பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அன்றும் இவர்கள் இருவரும் ஆசராகவில்லை. பின்னர் நவம்பர் 2ம் தேதி ஆன இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் இந்த விசாரணையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் மூன்றாவது முறையாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

அதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு அடுத்த விசாரணைக்கு கட்டாயம் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுருக்கிறார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்கு இஷ்டம் இல்லை என்றால் இருவரும் சேர்ந்து வாழ வேண்டியது தானே… ஏன் இப்படி சட்டத்தையும் வழக்கறிஞர்களையும் காக்க வைக்கிறீர்கள்? என நெட்டிசன்ஸ் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பி விளாசியுள்ளனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்து விசாரணைக்கு ஆஜராகாததால் இருவரும் சேர்ந்து வாழ முடிவில் இருப்பது ஓரளவு உறுதி செய்து இருக்கிறது. எது எப்படியோ நல்ல செய்தி வந்தால் போதும் என தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.