தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
ரஜினியின் மூத்த மகள் நடிகர் தனுஷை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஜோடி, ஜனவரி 2022ஆம் ஆண்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். இது இரு குடும்பத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அவ்வப்போது மகன்களின் பள்ளி விழாக்களில் தென்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இருவரின் விவாகரத்து வழக்குகள் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பல நல நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஆஜராக வில்லை. இதனால் வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரிந்து வாழ ஆசைப்படும் இருவரும், நேரில் ஆஜராகாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் ரஜினியின் உடல்நலக்குறைவு காரணமாக ஐஸ்வர்யா வராமல் இருந்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் மனஉளைச்சல்தான் என்பதால், மீண்டும் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து வாழ முடிவு செய்துள்ளார்களோ என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.