தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தில் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து இருக்கிறார்.
ஆம் அவரின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்போது கமிட்டாகி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அமரன் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்தவர் ராஜ்குமார் பெரியசாமி.
அந்த திரைப்படம் முழுமையாக வெற்றி அடைவதற்குள் அடுத்த படத்தை துவங்கிவிட்டார் இயக்குனர். ஆம் அதுவும் நடிகர் தனுஷுடன் தானாம். இது கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அதன் வெற்றியை தானம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணி ராஜ்குமார் பெரிய சாமியுடன் கைகோர்த்து இருக்கிறாரா தனுஷ்? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது .
முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே மிகப் பெரிய பிரச்சனை நிலவி வந்ததாகவும் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக பெரும் போட்டி இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இப்படி இருக்கும் சமயத்தில் மீண்டும் அந்த தொழில் ரீதியான போட்டி இருப்பது உண்மைதான் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனின் வெற்றிப்பட இயக்குனருடன் கைகோர்த்திருப்பதன் மூலம் உறுதி செய்துள்ளது.
நடிகர் தனுஷின் 55 வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டதாகவும் அதன் புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர் பட குழுவினர் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது கூடிய விரைவில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.