சூர்யா என் கணவரிடம் என்னை பற்றி அப்படி சொல்லியிருக்கான் – டிஸ்கோ சாந்தி வேதனை!

தென்னிந்திய சினிமாவில் 70களில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அக்காலத்து இளைஞர்களை வசீகரித்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் கிட்டத்தட்ட கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக பார்க்கப்பட்டு வந்தார். 70ஸ் மற்றும் 80ஸ் வாலிப வட்டத்தை தனது கவர்ச்சி நடனத்தால் வசீகரித்து வைத்திருந்தார்.

திறமையான டான்சராக பார்க்கப்பட இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் சுமார் 900 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தார். பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவரது சகோதரி லலிதா குமாரி பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி அவர்.

டிஸ்க்கோ சாந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்த போது தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரியை 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஸ்ரீஹரி இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றி டிஸ்க்கோ சாந்தி பல்வேறு விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது நடிகர் சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். அதன் பிறகு எனக்கு அரவிந்த் ஸ்வாமியை மிகவும் பிடிக்கும். அவர் தகளபதியில் மிகவும் அழகாக இருப்பார். கமல் ஹாசனுக்கு பிறகு என அரவிந்த் ஸ்வாமியை தான் பிடிக்கும். சூர்யா ஒருமுறை என் கணவரை பார்த்து ” அக்காவை கேட்டதாக சொல்லுங்க” என சொன்னாராம். அன்றிலிருந்து அவரை தம்பியாக எடுத்துக்கொண்டேன் என செம ஜாலியாக கூலாக பேசியுள்ளார்.

https://www.youtube.com/shorts/ZFF9uYNxklQ.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.