பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி ஹைதராபாத், நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 – தி ரூல்’. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது.
அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரைப் பார்க்க ரசிகர்கள் வேகமாகச் சென்றனர். எனவே, அப்போது உண்டான இந்தக் கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி உயிரிழந்தார். அது மட்டுமல்லாமல், அவரது மகன் படுகாயம் அடைந்து மயக்கமான நிலையில் கீழே விழுந்தார்.
பின்பு, மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். அடுத்து கோமாவில் இருந்த நிலையில், நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அந்தப் பெண் இறந்ததை தொடர்ந்து, அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் : மாப்பிள்ளை இவரா? ரசிகர்கள் ஷாக்!
அப்போது, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்ட நிலையில், கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், அல்லு அர்ஜூனுக்கு பெண் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் வழங்கி, ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்த நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.