பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கி ஹைதராபாத், நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 – தி ரூல்’. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது.
அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரைப் பார்க்க ரசிகர்கள் வேகமாகச் சென்றனர். எனவே, அப்போது உண்டான இந்தக் கூட்ட நெரிசலில் ரேவதி (39) என்ற பெண் சிக்கி உயிரிழந்தார். அது மட்டுமல்லாமல், அவரது மகன் படுகாயம் அடைந்து மயக்கமான நிலையில் கீழே விழுந்தார்.
பின்பு, மருத்துவமனையில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்தச் சிறுவன், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். அடுத்து கோமாவில் இருந்த நிலையில், நல்ல முன்னேற்றத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அந்தப் பெண் இறந்ததை தொடர்ந்து, அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் : மாப்பிள்ளை இவரா? ரசிகர்கள் ஷாக்!
அப்போது, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்ட நிலையில், கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், அல்லு அர்ஜூனுக்கு பெண் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் வழங்கி, ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்த நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.