சினி அப்டேட்ஸ்

கொஞ்சம் பேசித்தான் பாருங்களேன்.. ஜெயம் ரவி – ஆர்த்திக்கு டைம் கொடுத்த கோர்ட் !

ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் சமீப காலமாக மனக்கசப்புகள் இருந்து வந்ததை அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அறிய முடிந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இருவரும் பிரிவு அறிக்கையை வெளியிட்டனர்.

இதனிடையே, ஆர்த்தியிடம் இருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (நவ.15) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். அதேநேரம், ஆர்த்தி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதனால் இருவரும் ஆலோசனைகளைப் பெற்று சமரச மையத்தில் விரைவில் பேச உள்ளனர். மேலும், இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருக்கிறது.

ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம்: முன்னதாக, கடந்த 2009ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதி மகிழ்ச்சியாகவே தங்களது இல்லற வாழ்வை வசித்து வந்தனர்.

இதையும் படிங்க; மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!

இதனிடையே தான், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். முக்கியமாக, சமூக வலைத்தளங்களில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கி இருந்தது, இருவருக்கும் இடையே விரிசல் இருந்ததை தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

9 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

10 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

10 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

12 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

12 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

13 hours ago

This website uses cookies.