சினி அப்டேட்ஸ்

அந்த பாடகி தான் என் உயிரை காப்பாற்றினார்…. தப்பா பேசாதீங்க – கொந்தளித்த ஜெயம் ரவி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து மனைவி ஆர்த்தி இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது எங்களுடைய ஆலோசனை கேட்காமலேயே அவரின் தனிப்பட்ட முடிவாக விவாகரத்தை அறிவித்துவிட்டார்.

இது குடும்ப நலன் சார்ந்து எடுக்கப்பட்டதில்லை. முழுக்க முழுக்க அவருடைய முடிவு. இது எனக்கு தெரியவே தெரியாது. எனக்கூறி அதிர்ச்சியை கிளப்பி இருந்தார் இதை அடுத்து ஜெயம் ரவி பிரபல பெண் பாடகியான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி அடுக்கடுக்கான விஷயங்கள் இந்த விவாகரத்தை குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ஜெயம்ரவி இது குறித்து நிரூபர்களை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர் பேசியதாவது, நான் எடுத்த இந்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் வேறு வழி இல்லை.

இது என்னுடைய முடிவு இது என் வாழ்க்கையின் ஒரு வேகத்தடை மாதிரி தான். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே நான் கோர்ட்டுக்கு போய் விட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கிசுகிசுக்கள் வெளிவந்துவிட்டது. நான் எடுத்த விவாகரத்து முடிவு என்னுடைய முன்னாள் மனைவிக்கு தெரியாது என்று கூறுவது தவறாக தோன்றுகிறது .

ஏற்கனவே நான் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அதை அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் எனக்கு தகவலும் கிடைத்தது. அவர்கள் தரப்பிலும் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது. இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு இது தெரியவே தெரியாது என கூறுவது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. தெரியாமல் எப்படி முடியும்? எனக்கு புரியவில்லை. நான் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்தேன் என அவர்கள் கூறுவது சரியில்லை.

என் மகன்களுடன் தான் நான் இருந்தேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கேன். சட்ட ரீதியாக எதையும் நான் எதிர்கொள்வேன். மேலும் பேசிய ஜெயம் ரவி… பெண் பாடகியுடன் என்னை இணைத்து பேசுவது தவறு. அந்த பொண்ணுக்கு அம்மா அப்பா இல்லை அவருடன் இணைத்து பேசினால் அது பேசியவர்களுக்கு தான் அசிங்கம் அந்தப் பெண் லைசன்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட் நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கார். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

அவரோடு என்னோடு இணைத்து பேசுவது மிகப்பெரிய தவறு. நான் அவரோடு ஒரு ஆன்மீக மையம் ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தவிர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதா என்று எனக்கு புரியவில்லை. ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி பேசினார்கள். அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார். அடுத்தது என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை .

அம்மா அப்பா என் முடிவின்படியே போகிறார்கள். நான் சுற்றுகிற நபரும் இல்லை. என் பிரச்சினையில் ஒரு நாள் உண்மை என்ன என்பது தெரியவரும் அது கோர்ட்டில் தான் தெரியவரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும் மகன்களுடன் சேர்ந்துதான் இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: ஒரே ஒரு படம் தான்… மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆன அட்லீ… மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

நோட்டீஸ் அனுப்பும் முன் மூத்த மகனிடம் விசயத்தை சொன்னேன். காலை உடைத்து கையை உடைத்து எல்லாமே நான் சம்பாதித்தது மக்கள் கொடுத்தது தான். என் இமேஜ் அவ்வளவு சீக்கிரமாக உடைத்து விட முடியாது.

ஒருநாள் உண்மை என்ன என்பது தெரிய வரும்போது சாணியை திருப்பி அடிப்பார்கள் என்று ஜெயம் ரவி ஓப்பன் ஆக பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சு மனைவிக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது யார் மீது தான் தவறு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Anitha

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

9 hours ago

This website uses cookies.