கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா (Shobitha Shivanna) மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹைதராபாத்: கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தவர் ஷோபிதா சிவன்னா. இந்த நிலையில், இவர் நேற்று (டிச.1) தெலுங்கானா மாநிலம், காச்சிபெளலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொண்டாபூர் பகுதியில் உள்ள தனது அபார்ட்மெண்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், ஷோபிதாவின் சடலம் தற்கொலை செய்து கொண்டவாறு இருந்த நிலையிலேயே மீட்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது உடல் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது
யார் இந்த ஷோபிதா சிவன்னா? 1992, செப்டம்பர் 23 அன்று கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் பிறந்த ஷோபிதா சிவன்னா (Shobitha Shivanna), தனது பள்ளிப் படிப்பை பல்த்வின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்து உள்ளார். தொடர்ந்து, NIFT-இல் பேஷன் டிசைனிங் முடித்த அவர், அந்தத் துறையிலேயே சிறிது காலம் பணிபுரிந்து உள்ளார்.
பின்னர் 2015ஆம் ஆண்டு ராங்கிடரங்கா (RangiTaranga) என்ற கன்னட படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனது நடிப்பிற்காக பாரட்டப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், எரடாண்ட்லா மூரு (Eradondla Mooru) மற்றும் ATM; Attempt to Murder ஆகிய மெகாஹிட் படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
இதையும் படிங்க: பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
அது மட்டுமல்லாமல், காலிபடா (Gaalipata), மங்கள கெளரி (Mangala Gowri) மற்றும் பிரமகந்து (Brahmagantu) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து, குடும்பம் முழுவதும் நன்றாகத் தெரிந்த நடிகையாக உள்ளார். இந்த நிலையில், அவரது திடீர் இறப்பு கன்னட திரையுலகம் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.