“பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில் பாலிவுட் திரைப்படங்களே அதிகளவில் வசூல் செய்துகொண்டிருந்தது. அதனை முறியடித்த பெருமை ஷங்கரை அடுத்து ராஜமௌலிக்கே உண்டு.
“பாகுபலி” திரைப்படத்தை தொடர்ந்து “பாகுபலி 2”, “RRR” போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது.
மகேஷ் பாபு திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகாபாரதத்தை திரைப்படமாக உருவாக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளதாகவும் அதே போல் இத்திரைப்படம் 2030 ஆம் ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் “மகாபாரதம்” திரைப்படம்தான் ராஜமௌலியின் கடைசித் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகப்போகிறாராம். இவ்வாறு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
This website uses cookies.