அமரன் படத்தைப் பார்த்த பின்பு, விஜய் கூறியது என்ன என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மனம் திறந்து பேசி உள்ளார்.
சென்னை: இயக்குனர் ராஜ்குமார் பெரியாசாமி, சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்தார். இந்த நிலையில், இது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார். அதில் பேசிய அவர், “அமரன் படம் கொஞ்சம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறாக இருக்கிறது.
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது அமரன் படத்தைப் பற்றி, அதான் உலகமே சொல்கிறதே.. உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என விஜய் கூறியதாகக் கூறினார். இந்தச் சந்திப்பின் போது, விஜய் – ராஜ்குமார் பெரியசாமி இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினைப் பார்த்து ரசித்துள்ளனர்.
தொடர்ந்து, இருவரும் சேர்ந்து புதிதான புகைப்படம் ஒன்றையும் எடுத்து உள்ளனர். இந்த சந்திப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதனால் மிகவும் பெருமைக்குரிய மனிதராக மாறியதாகவும் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி பொங்க நேர்காணலில் பேசியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
இந்த பாராட்டிற்கெல்லாம் காரணம், கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவரைப் பெற்ற அமரன் படம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும்.
இதையும் படிங்க: தெரியாத கடவுளை விட தெரிந்த மனிதனை நம்பலாம் : அரசியலில் விஜய் குறித்து பிரபலம்!
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் வெளியான இப்படம், இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிப்பதாக எதிர்ப்புகள், திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்களையும் சந்தித்தது. இதனிடையே, சென்னை ராணுவப் பயிற்சி மையம் சார்பில் சிவகார்த்திகேயன் கெளரவிக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.