பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் முதல் நாளே எவிக்ஷனில் சாக்சனா வெளியேறியது உள்ளிட்ட பல சம்பவங்களால் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பெரும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் துவங்கிய ஐந்தாவது நாளான இன்று வீட்டிற்குள் ரவிந்திருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று ஆண்கள் அணியினர் இணைந்து பிராங்க் ஒன்றை செய்தனர். இதனால் பெண்கள் அணியில் இருந்த அனைவரும் கடும் கோபத்தில் இருந்தார்கள் .
பெண்கள் அணியை ஏமாற்ற ஆண்கள் அணியினர் செய்த இந்த பிராங்க் தற்போது ஆண்கள் அணியிலேயே மோதலை சண்டையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த பிராங் செய்வதற்கான காரணம் ரஞ்சித் நாமினேஷன் செய்யப்பட்டு இருப்பதினால் தான் என ரவீந்தர் சொல்ல என் பெயரை பயன்படுத்தி ஏன் கேம் ஆடுறீங்க?
என்னுடைய பெயரை பயன்படுத்தாதீங்க என ரஞ்சித் Fatman’னிடம் கூற ரவீந்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அந்த சமயத்தில் தர்ஷா மற்றும் தர்ஷிகா இருவருமே இணைந்து ஆடியது தான் கேம் என ரவீந்தர் சொல்ல அதில் தர்ஷிகா இது பொய் என அவரை அதட்டி கூறுகிறார் .
அதே போல் இந்த விஷயத்தில் விஷாலுக்கும் ரவிந்திருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. இப்படியாக விளையாட்டில் ஆரம்பித்த ஒரு விஷயம் தற்போது பெரும் சண்டையுடன் மோதலில் முடிவடைந்து இருக்கிறது. இதை பார்த்தால் ரவீந்தர் தொடர்ந்து அடுத்தடுத்த பல போட்டியாளர்களுடன் சண்டையும் வாக்குவாதமாகவே எல்லோருடைய எல்லோரையும் பகைத்துக் கொள்கிறார்.
இதையும் படியுங்கள்:
இந்த விஷயத்தில் பலரும் ரவீந்திரனை திட்டி தீர்த்து வருவதோடு ரஞ்சித்துக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ரவீந்தர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மற்றவர்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவது மிகப்பெரிய தவறு என பலரும் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது இப்படியே போனால் ரவீந்தர் நிச்சயம் அசிங்கப்பட்டு தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.