பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். இந்த நிலையில், இன்று (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டில், கொள்ளை முயற்சி நடைபெற்றதாகத் தெரிகிறது. அப்போது, நடைபெற்ற தகராறில் சைஃப் அலிகான் காயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், “அடையாளம் தெரியாத நபர் சைஃப் அலிகான் வீட்டுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கத்தியுடன் வந்த நபருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக சைஃப் காயமடைந்ததாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, லீலாவதி மருத்துவமனைக்கு சைஃப் அலி கான் கொண்டு செல்லப்பட்டார்” எனத் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பாக மும்பை லீலாவதி மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரியும், மருத்துவருமான நீரஜ் உத்தமானி கூறுகையில், “நடிகர் சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு இடங்களில் காயங்கள் இருந்தன. ஒரு காயம் அவரது முதுகுத் தண்டுவடத்தின் அருகே இருந்தது.
எனவே, அதற்காக அறுவை சிகிச்சை செய்கிறோம். மேலும் அவருக்கு நரம்பியல் அறுவை நிபுணர் நிதின் டாங்கே, காஸ்மடிக் அறுவை நிபுணர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?
அறுவை சிகிச்சைக்குப் பின்னரே காயத்தின் தன்மை பற்றி மேற்படி தகவல்களைக் கூற முடியும்” என்றார். இதனிடையே, சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டாரா அல்லது மர்ம நபருடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்தாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் மும்பை போலீசார் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.