இயக்குனர் சீனு ராமசாமி, தனது மனைவி தர்ஷனாவைப் பிரிந்து, விவகாரத்து கோரி உள்ளதாக அறிவித்து உள்ளார்.
சென்னை: கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. பாசம், குடும்பம், என உறவுகளைக் கட்டிப்போடும் இவரின் திரைக்கதைக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உண்டு.
அதிலும், 2016ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை படம் இன்றளவும் மீம்ஸ்கள் முதற்கொண்டு ரசிக்கப்பட்டு வருகிறது. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லதுரை படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சீனு ராமசாமி எக்ஸ் பதிவு: இந்த நிலையில், தனது மனைவி உடனான விவாகரத்து குறித்து அறிவித்து உள்ளார். இது தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இதையும் படிங்க: CM வீட்டில் உள்ள முக்கிய நபர் அதானியுடன் சந்திப்பு? ஆதாரத்தை வெளியிடும் அண்ணாமலை!
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” எனக் கூறி, விவகாரத்து கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் விவாகரத்து கோரி உள்ளனர். அதேபோல், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரும் விவகாரத்து கோரி உள்ளனர். இவ்வாறு திரையுலகில் இருப்போர் விவகாரத்து கோருவது தொடர்கதையாகி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.