சினி அப்டேட்ஸ்

முடிஞ்சுபோச்சு.. ’இந்தியன் 3’ நாள் குறித்த ஷங்கர்.. கதறும் ரசிகர்கள்!

இந்தியன் 3 பணிகள் தொடங்கினால் அடுத்த ஆறு மாதங்களில் படம் தயாராகிவிடும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் முடிந்துவிட்டதால் இந்தியன் 3 படத்தை தொடங்கிவிட வேண்டியது தான். இந்தியன் 3 பணிகள் தொடங்கினால், அடுத்த 6 மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம். அதில் கிராஃபிக்ஸ் பணிகள் அதிகமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய மாஸ் ஹிட் ஆன திரைப்படம் இந்தியன். இந்த நிலையில், மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ படம் கடந்த ஆண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.

ஆனால், படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் படுதோல்வியைச் சந்தித்தது. ஆனால், இந்தப் படத்தின் கதை அத்துடன் முடிவடையவில்லை. மேலும் இந்தியன் 3 படத்தின் டிரெய்லர் காட்சிகளும் இந்தியன் 2 இறுதியில் இணைக்கப்பட்டு இருந்தது.

அதேநேரம், லைகா நிறுவனம் – ஷங்கர் இடையே வணிக ரீதியான பிரச்னை உருவாகியுள்ளது. எனவே, இந்தப் பிரச்னைகளை பேசி முடித்தவுடன் தான் ‘இந்தியன் 3’ பணிகள் தொடங்கப்படக் கூடிய நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு அமெரிக்காவில் இருந்து கமல் இந்தியா திரும்ப வேண்டும் என்பதால், படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!

மேலும், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோரது நடிப்பில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் கேம் சேஞ்ஜர். இப்படமும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. இவ்வாறு ஷங்கர் தொடர்ந்து தோல்வி முகத்திலே இருப்பதால், இந்தியன் 3 குறித்தான தகவலால் கலக்கத்தி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.