நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென 8-வது சீசனை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை எனக்கூறிய அதிரடியாக வெளியேறினார் .
அதை எடுத்து விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்து சிறப்பாக தன்னுடைய பணி செய்து வருகிறார். நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சினேகனிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர் தெளிவான விளக்கத்தையும் தெரிவித்திருக்கிறார் .
அதாவது கமல்ஹாசன் இரண்டு பிக் பாஸ் முடித்துவிட்டு வெளியில் வந்து விடுவார் என நான் நினைத்தேன். ஏனென்றால் அப்போது அவர் அரசியல் வேளையில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இப்படி ஒரு நெருக்கடியில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா? என்று கூட நாங்கள் அவரிடமே நேரடியாக கேட்டோம்.
அவர் ஒப்பந்தம் செய்தாச்சு பண்ணி தான் ஆக வேண்டும் என கூறினார். அவர் என்ன பொறுத்த வரைக்கும் காசுக்காக எந்த வேலையும் செய்ய மாட்டார்.அதற்காக காசே வாங்காமலும் அவர் வேலை செய்யும் ஆள் கிடையாது. காசுக்காக ஒரு வேலையை பார்க்க மாட்டார்.
நான் இன்னும் முன்னாடியே கமல்ஹாசன் வெளியில் வந்து விடுவார் என நினைத்தேன். ஆனால் இப்போ வெளியே வந்தது பெரிய அதிர்ச்சி எல்லாம் கிடையாது. ஏனென்றால் அவருக்கு இதைவிட அதிகமான பெரிய வேலைகள் இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியின் என்ட்ரி குறித்து பேசிய சினேகன் நிரந்தரமா ஒரு ஆள் ஒரு இடத்தில் இருக்கவே முடியாது.
ஒரு இடத்திற்கு இன்னொரு ஆள் வந்து தானே ஆகணும் ரீபிளேஸ் பண்ண ஆள் சரியான ஆள் என்று தான் நான் நினைக்கிறேன். கமல் சாரிடம் இருப்பதை விஜய் சேதுபதியிடமும் விஜய் சேதுபதி இடம் இருப்பதை இன்னொரு நபரிடமும் நாம் எதிர்பார்க்க முடியாது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கோணங்கள் இருக்கிறது அந்த கோணத்தில் அவரவர் சிறப்பாக தன் பணியை செய்து வருகிறார்கள். விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நன்றாக இருக்கிறது என சினேகன் கூறினார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
This website uses cookies.