தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ஆன பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து நண்பர்களாக பழகத் தொடங்கி பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர் .
பல வருடங்கள் காதலித்து வந்த இவர்கள் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேவ், தியா என இரண்டும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இப்போது நன்றாக வளர்ந்து விட்டார்கள் .
ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அதில் வெற்றியும் படைத்து வந்தார். இதனடைய ஹிந்தியில் திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்துவந்த ஜோதிகா மும்பையில் தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் சென்று செட்டிலாக இருக்கிறார்.
சூர்யா கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதன் பிரமோஷன்களில் சூர்யா படு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேட்டி பேசிய நடிகர் சூர்யா நானும் ஜோதிகாவும் இணைந்து மீண்டும் நடிக்க வேண்டும் என்பது எந்த நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.
ஆனால் இதனால் வரை அது கனவாகவே இருக்கிறது. எங்களை இருவரையும் வைத்து படம் இயக்குங்கள் என்று எந்த இயக்குனரையும் நாங்களாக போய் கேட்கவே இல்லை. அது தானாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என சூர்யா அந்த பேட்டியில் கூறியிருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் பலரும் சூர்யா ஜோதிகா இருவரையும் மீண்டும் திரையில் காண நாங்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.