சினி அப்டேட்ஸ்

அந்த பிரச்சனையில் தலையிடாதே… ஜோதிகா சொல்லிட்டே இருப்பாங்க – சூர்யா Open டாக்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சில வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கை துவங்கிய நடிகர் கார்த்தி முதல் படமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததை அடுத்து அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது .

இதை அடுத்து தொடர்ந்து சில வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் நடித்து படுதோல்வியை சந்தித்தார் கார்த்தி. அதை அடுத்து தற்போது 96 திரைப்பட இயக்குனர் ஆன பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி .

இந்த திரைப்படத்தில் அவருடன் நடிகர் அரவிந்த்சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில் உச்சகட்ட எதிர்பார்ப்பில் மெய்யழகன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் .

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா இது குறித்து பேசியபோது மெய்யழகன் திரைப்படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டு அழுகை சந்தோஷம் எல்லாமே வந்து சேர்ந்தது. பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு நான் கார்த்தியை கட்டி அணைத்துக் கொண்டேன். பிரேம் இயக்கிய 96 படத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அந்த படம் போல் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதைதான்.

இதையும் படியுங்கள்: எல்லாத்துக்கும் காரணம் குஷ்பு தான்…. திசை திரும்பும் ஜெயம் ரவியின் விவாகரத்து சர்ச்சை!

கார்த்தியின் இந்த கதை தேர்வு குறித்து ஜோதிகா என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். சிறப்பாக இருக்கிறது என அதே போல் ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள் அது எவ்வளவு கலெக்ஷன் செய்தது என்ற பிரச்சனை எல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு வேண்டாம்.

விநியோகிஸ்தர்களுக்கும் படத்திற்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கும் தான் அதைப் பற்றிய கவலை. எனவே படத்தை பார்த்துவிட்டு என்ஜாய் பண்ணுங்கள் அது மட்டும் போதும் விமர்சனம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வம் என சூர்யா கூறினார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.